0

அது என்ன பெரிய கம்ப சூத்திர வேலையா ? என்று சொல்கிறார்களே, கம்ப சூதரம் என்றால் என்ன என்று தெரியுமா?

அது கம்ப சூத்ரம் அல்ல. கம்ப சித்திரம் என்பதே...

கம்பனுடைய ராமாயணத்தை படிப்பவர்கள், அந்த சொல் அலங்காரத்தில் மயங்குவதோடு அவர் வர்ணிக்கும் காட்சிகளை  சம்பவங்களை எல்லாம் அப்படியே தத்ரூபமாக மணக்கண்முன் கொண்டுவர முடியும்.

அத்தகைய விஷ்வல் எஃபெக்ட் உள்ள பாடல்கள் அவை...

அப்படி ஒரு திறமையினை,சிறப்பினை யாரும் எளிதில் அடைந்து விட முடியாது என்பது உண்மை....அதனால் தான் ஒருவர் தன்னால்முடிய கூடிய எந்த வேலையையும்,இது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் போல  கடினமான வேலையல்ல என்று சவால் விடுப்பார்கள்.....

இப்போது தெரிகிறதா... எதற்காக கம்ப சூத்ரம் என்ற வார்த்தையை  பயன்படுத்துகிறார்கள் என்று....இனி  நீங்களும் சொல்லலாம் "இது என்ன பெரிய கம்ப சூத்ரமா என்று"...

கருத்துரையிடுக Disqus

 
Top