0

திறந்த அறிவு 
புதிய முயற்சிகளுடன் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அண்மைக்காலமாக்கத் துவங்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படும் போது தொழில்நுட்பம் மற்றும் உளவியல் ரீதியாக ஊழியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர் என்று தெரியுமா..?
எனவே படித்த பட்டம் மட்டும் இல்லாமல் ஊழியர்களைத் தேர்வு செய்யும் போது நிறுவனங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கின்றன என்று இங்குப் பார்ப்போம்.

திறந்த அறிவு

நீங்கள் விண்ணப்பித்த வேலைக்கான கேள்விகள் மட்டும் இல்லாமல் புதிர் கேள்விகளுக்கும் தயாராக இருத்தல் வேண்டும்.

புதிர் கேள்விகள் பெருப்பாலும் சிக்கலான சூழ்நிலைகளில் பிரச்சனைகள் நேரும் போது வேலைப் பழுவை நீங்கள் எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை இதற்கு நீங்கள் அளிக்கும் பதிலை வைத்தே நேர்முகத் தேர்வில் முடிவு செய்வார்கள்.


தொலைநோக்கு பார்வை

நேர்முகத் தேர்வில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவனத்தின் உணர்வு மற்றும் பார்வையை புரிந்து செயல்படுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

அதாவது பொறியாளர் பணிக்கு நீங்கள் நேர்முகத் தேர்வில் ஒருவர் கலந்து கொள்ள வந்தால் அவருக்குப் பொறியாளர் துறையின் மீது மிகுந்த உணர்வுடன் கூடிய ஆர்வம் இருத்தல் வேண்டும்.


கதைகள்

நேர்முகத் தேர்வின் பேதே அல்லது வேலைக்கு விண்ணப்பிக்கும் பேதே உங்களது தனிநபர் விவரங்களைக் கதைகளை சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது சொந்த கதை மற்றும் அனுபவங்களைப் பொறுத்தே ஊழியர்களைத் தேர்வு செய்வர்.


புதிய சிந்தனைகள் மற்றும் புதிதாக கற்றுக் கொள்ளுதல்

பணியில் சேர்ந்த முதல் நாள் முதலே புதிதாக கற்றுக் கொள்ளுதல் மற்றும் அனைத்து வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல். இதற்கு மேலும் நிறுவனத்தைப் பற்றி ஆய்வு செய்து இதில் மிக முக்கியம்.

நம்பகத் தன்மை

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் உங்களுக்கு முடிவெடுக்கும் திறன் எப்படி உள்ளது என்று சோதிப்பர்.

உங்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கு அல்லது சிக்கலை நீங்கள் தீர்வு செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். சிறந்த அனுமானங்களுடன் அறிவுசார் யூகங்களைப் பயன்படுத்தி வேலையை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top